Have a Nice Day

Enjoy

Top 10 most creative people in business

10. Qi Lu – President of Online Services, Bing; Microsoft
It’s hard to imagine software giant Microsoft in the role of David, but up against the search Goliath Google, the casting fits. Spurning the antiquated practice of releasing new updates every couple of years, Lu is creating an environment where live-cycle updates and product improvements are constant. Bing’s share of the search business is still only about 12%, but if anyone can turn a pebble into a deadly stone, Lu is the man. More after the break...
9. James Cameron – Filmmaker, Lightstorm Entertainment
Not only did Avatar become the highest-grossing film in history (nearly $2.7 billion worldwide) — surpassing Cameron’s previous record setter, Titanic — but its visual spectacle and technical mastery also laid to rest any doubts about 3-D as a profound medium for live action and artistic ambition. When it comes to the business of Hollywood, Avatar cemented his place in the realm of the gods.

8. Hannah Jones – VP of Sustainable Business and Innovation, Nike
Jones says she joined Nike’s sustainability team to test whether it was “more effective to shout from the outside or work from the inside.” Her conclusion: The creative combination of both is the most potent. She has paired Nike with NASA and venture capitalists to address water shortages; with Creative Commons to launch GreenXchange, a platform for companies to share green intellectual property; and with PopTech to create an Open Collaboration Lab for scientists and engineers.

7. Chris Anderson – Curator, TED Conferences
As chief curator of TED — the Long Beach, California, conference of multidisciplinary luminaries turned viral-video phenomenon turned cultural juggernaut — the Brit has guided it into a newly global, open-source phase this year. Volunteers have translated thousands of videos into 76 languages and introduced TEDx, independently organized events that in the first year has produced an astonishing 500 gatherings in 70 countries and 35 languages.

6. Steve Burd – CEO, Safeway
Steve Burd played a crucial role in the recent health-care debate. The exec appeared repeatedly on Capitol Hill to describe the health and financial benefits of the grocery chain’s unconventional wellness program, which includes lower insurance premiums for nonunion employees who maintain healthy blood-pressure and cholesterol levels and don’t smoke. Burd insists that the company’s health-care costs rose just 2% from 2005 to 2009 compared to a nearly 40% increase for most companies. “The Safeway amendment” — a provision that increases the incentives companies can pay healthy employees — is now law.

5. Ryan Murphy – Creator and Producer, Glee
The Peabody-winning Fox series Glee, his satire about a high-school show choir, has become a ratings rock star. It’s the No. 1 show among female teens and the top new show among women 18 to 49, and more of its viewership is made up of 18- to 49-year-olds in households making $100,000-plus than any other broadcast-network show.Glee has also spawned more than 50 iTunes singles — Murphy picks all the songs himself — as well as three soundtracks and a sold-out concert tour.

4. Shiro Nakamura – Chief Creative Officer, Nissan
 With the zero-emissions Leaf — which goes on sale later this year and is the first global mass-market electric car — he has tried to put his finger on the consumer pulse and make a car that will sell. “We did not want to make something very strange for just the niche buyer,” Nakamura said last year. That hews to his belief that creativity at its best isn’t about just doing whatever you want: “More designers have to understand the values of society and the people they are creating the vehicles for.”

3. Elizabeth Warren – Consumer advocate, Congressional Oversight Panel
By calling the likes of Citigroup CEO Vikram Pandit on the carpet, jawboning with Jon Stewart, and pushing to create a consumer financial protection agency, Harvard law professor Elizabeth Warren has taken what could have been a paper-pushing position as chair of the Congressional Oversight Panel on the bank bailout to the forefront of the public conversation over financial reform.

2. Eddy Cue – VP of Internet services, Apple
Steve Jobs may own the limelight, but Eddy Cue holds the key to the Apple kingdom. Cue runs arguably the most disruptive 21st-century Web businesses: iTunes and the App Store, the latter of which is poised to create a $4 billion app economy by 2012. Cue’s next campaign will be challenging Amazon’s Kindle dominance, with the Cupertino cocktail of the iPad and the iBook store.

1. Lady Gaga – Pop Artist
Gaga broke through last year as a global phenomenon, musing on “disco sticks,” channeling Madonna’s glitter-glam fashion, and cribbing shock-rock performance notes from Alice Cooper. Gaga has done something unprecedented, melding her inspirations with au courant dance pop and Web savvy to build a business empire notable for both the speed of its creation and the diversity of its platforms.

Top 10 Richest Indians

10. Gautam Adani
Gautam Adani — Net Worth: $6 Billion
Started just in 1988, the Adani group has climbed up the ladder fast to reach forefront of business in commodities trading and expanded to infrastructure and energy. Its chairman Gutam Adani is our tenth richest person.

09. Kumar Birla

Kumar Birla — Net Worth: $7.8 billion

Birla group used to be the number two business house in India but after its split some decades ago, one of the group companies Aditya-Birla group, is the world's tenth largest cement company.

08. Sunil Mittal

Sunil Mittal — Net worth - $8.2 billion.

Airtel is the pioneer in the telecom in India and is the number one in the field.  It is this company that took mobile phone and telemedia to all the corners of India. The Bharthi Airtel, the company that owns Airtel has Sunil Mittal as its chairman.

07. Savitri Jindal

Savitri Jindal — Net Worth - $12 billion.

Om Prakash Jindal, the founder of the Jindal Group died in March 2005 and the family fortune was divided into four parts for 4 brothers but eh controlling interest went to his wife Savitri Jindal. The lady as the non-executive chairman of the O.P. Indal group. This company manufactures  power and steel. 

06. Kushal Pal Singh

K.P. SIngh — Net Worth - $13.5 billion.

The property company DLF's  slogan says it all: Building India. DLf is India's and now world's largest builders and their operations extend throughout India. Almost all metropolitan and tier II cities come under their developing activities. The chairman Kushal Pal Singh is an army veteran. DLF  has a city named after itself near Delhi: DLF city!

05. Shashi & Ravi Rhuia

Shashi - Ravi Rhuia — Joint Net Worth - $13.6 billion.

Family business to the fore again. When Nand Kishore Ruia,their father died, the brothers Shashi and Ravi Ruia took over the company known as Essar group. mainly into shipping and paint in the beginning, now their multi-faceted operations include steel, power and oil.

04. Azim Premji

Azim Premji — Net Worth - $14.9 billion

When Azim Premji was selling cooking oil, nobody knew him. He made a plunge into IT sector when it was in nascent stage. He did not look back since then. His Wipro is as well known as any other IT major in the world with its third largest exports from the country to scores of countries in the world. Computers and allied industries keep him in the 4th position.

03. Anil Ambani

Anil Ambani — Net Worth - $17.5 billion. 

Ambani brothers can easily be the richest people in the world by far, had they chosen to remain as one company. Alas, they had to part company and the younger Brother Anil Ambani comes third in our list of 10 richest Indians. His business interests include telecom, entertainment, financial services and infrastructure. His flag ship company is Reliance Dhirubhai Ambani Group.

02. Lakshmi N. Mittal

Lakshmi N. Mittal — Net Worth - $30 billion

You could have called him a little upstart some years ago and you would not have been more wrong. Not any more. From a scrap merchant in erstwhile Calcutta to one of the top steel magnets in the world is no joke. Sheer hard work and prudence has earned him the second place in this list. His factories are present in South America, India and Middle east.

01.  Mukesh Ambani

Mukesh Ambani — Net Worth - $32 billion.

Well, we all know who the first one is in our list. Yes, It is Mukesh Ambani, the elder of the Ambani brothers. He has his hand in many businesses but the important ones are Petrol, oil and gas. His Reliance Industries is the numero uno company in India.  Another distinction he has is that he is the second richest man in the world. Fortune magazinwe predicts he will be the richest man in the world before 2014. He continues his father, Dhirubhai Ambani's legacy in business.

இக்கால மாணவர்கள்! ! !

ஆசிரியர்        : பெரிய பையன் ஆனதும் என்ன பண்ணுவடா?

LKG பையன் :யாரையாவது கல்யாணம் பண்ணுவேன் சார்.




ஆசிரியர்        : அது இல்லடா! என்னவா வருவ?

LKG பையன் : மாப்பிள்ளையா வருவேன் சார்..



ஆசிரியர்        :அடடா. வளர்ந்ததும் என்ன எதிர்பார்ப்பேன்னு கேட்டேன்!!

LKG பையன்:ஒரு அழகான பொண்ணை தான் எதிர்பார்ப்பேன் சார்..



 ஆசிரியர்      :    அட முட்டாள்!.உன் அப்பா அம்மாவை என்ன 

செஞ்சு  சந்தோசப்படுத்துவ?

LKG பையன் : நல்ல மருமகளைக் கொண்டுவந்து சந்தோசப்படுத்துவேன்

சார்.



ஆசிரியர்       : அறிவு கெட்டவனே!! உங்க அப்பா உங்கிட்ட இருந்து என்ன 

எதிர்பார்ப்பார்?

LKG பையன் : வேற என்ன சார்?! ஒரு பேரனோ, பேத்தியோ எதிர்பார்ப்பார்.



ஆசிரியர்       : அட கொடுமையே!! வாழ்க்கைல உன் லட்சியம் 

என்னன்னாவது சொல்லு!!

LKG பையன் : நாமிருவர்.நமக்கிருவர்.



ஆசிரியர்       : சனியனே! போய்த் தொலை.

LKG பையன் :இன்னும் கேளுங்க சார்..



ஆசிரியர்       :????????????????????????

கவிதை சொல்லவில்லை

பெரிதாக ஒன்றும்
 
சொன்னதில்லை
 
கவிதையில்
 
ஆனாலும்
 
கவிதைகள் எப்போதும்
 
என்னைப் பார்த்ததில்லை
 
சிறுமையாய்





மனிதனைத்
 
திறக்கும் சொல் ஒன்று
 
காலங்காலமாய்
 
பூட்டியே கிடக்கிறது
 
தன்னைத்
 
திறந்து கொள்ளத் தெரியாமல்! ! !

அனுபவ கவிதை

என் ஊனம் பெறும்

ஒரு நாள் ஞானம்

அதுவரை இது

யாத்திரை காலம்! ! !



சொல்லெடுத்து
 
தரும் சொல்
 
சொல்வதில்லை
 
சொல்லென்று! ! !





அறைக்கு வந்த குழந்தை

அள்ளிப் போகிறது

இருளை! ! !



  
சந்திக்கும் போதெல்லாம்
 

முடிவுக்கு வருகிறது
 

பிரிவு  ! ! !

தாரமங்கலம் கைலாசநாதர் திருக்கோயில்


இது ஒரே நேரத்தில் கட்டப்பட்ட கோயில் அல்ல. 10 ஆம் நூற்றாண்டிலேயே

இதன் சில பகுதிகள் இருந்தன. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டி முதலி 

அரச பரம்பரையினர் இந்தக் கோயிலை விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர். 

பிற்காலத்தில் மும்முடிச் சோழனும், சீயாழி மன்னனும் இந்தக்

கோயிலைப்  புதுப்பித்து திருவிழாக்களைக் கொண்டாடி வந்துள்ளனர்.

வணங்காமுடி  மன்னர் காலத்தில்தான், இந்தக் கோயில் முழுமையாகக்

கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி 306 அடி

அளவுக்கு  மிகப்பெரிய கல்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது 13 ஆம்

நூற்றாண்டில்  கட்டப்பட்டது. ஆலயத்தின் ராஜகோபுரம் 90 அடி உயரத்தில்

ஐந்து அடுக்குகளைக் கொண்டது. ஒரு பெரிய தேரைக் குதிரைகளும்

யானைகளும்  இழுத்துச் செல்வதைப் போன்ற தோற்றத்தில் இந்தக்

கோபுரம் அமைந்துள்ளது. 

இந்தக் கோயிலில் ஆகஸ்டு-செப்டம்பர் மற்றும் பிப்ரவரி மார்ச்


மாதங்களில்  நுழைவு வாயில் கோபுரத்தின் வழியாக மாலை நேர


வெயில் நுழைந்து  கருவறையில் இருக்கும் சிவகாமி சமேதராக


வீற்றிருக்கும் கைலாசநாதர்  சிலை மீது விழும்.
சிறப்புகள் :மாசி 9,10,11 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி நந்தியின் கொம்பு

வழியே  சென்று சிவலிங்கத்தின் மீது மூன்றாம் பிறை போல் விழுகிறது.

இதைக்காண  அன்றைய தேதிகளில் கோயிலில் பக்தர்கள் வெள்ளம் அலை

மோதும். ரதி  சிலையிலிருந்து பார்த்தால் மன்மதன் தெரியும் வகையிலும்,

மன்மதன் சிலையிலிருந்து பார்த்தால் ரதி தெரியும்படியும் அமைந்த


சிற்பம் சிறப்பானது.இத்தலத்தில் உள்ள கல் சங்கிலி, கல் தாமரை, சிங்கம்

ஆகியவை  சிற்பகலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.எப்போதும் குளிர்ச்சியாக

இருக்கும்  பவளக்கல் பட்டியக்கல் நிலை கோயிலின் நுழைவாயிலில்

உள்ளது.பாதாள  லிங்கம் : இத்தலத்திலேயே வெகு சிறப்பான சன்னதி இது.

தலத்தின்   கீழ்பகுதியில் ஒரு காற்று புக முடியாத அறைக்குள் இருக்கும்

இந்து பாதாள  லிங்கத்திற்கு பச்சை கற்பூரம் வைத்து செவ்வாய்க் கிழமை

தோறும்  அபிஷேகம் செய்தால் கல்யாண பாக்கியம், புத்திர பாக்கியம்

மற்றும் தொழில்  விருத்தி ஆகியவை கை கூடுகின்றன. ஜூரகேஸ்வரர் :

இத்தலத்தில் உள்ள  ஜூரகேஸ்வரர் 3 தலை, 3 கால்களோடு இருப்பது

சிறப்பு. இவருக்கு மிளகு ரசம்   வைத்து சாதம் படைத்து வடைமாலை

சாத்தி அபிஷேகம் செய்தால் காய்ச்சல் மற்றும் தீராத வியாதிகள் 

குணமடைகின்றன.

21 லட்சம் கார்களை திரும்பப் பெறும் நிஸ்ஸான்

எஞ்ஜின் கோளாறு காரணமாக 21 லட்சம் கார்களை திரும்பப் பெறுவதாக

அறிவித்துள்ளது நிஸ்ஸான் நிறுவனம்.


ஜப்பானின் முன்னணி கார் உற்பத்தியாளரான நிஸ்ஸான் உலகமெங்கும்

 தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. இந்தியாவிலும் சென்னை 

உள்ளிட்ட மூன்று இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன.


ஆனால் இந்த நிறுவனத்தின் கார்களில் சர்வதேச அளவில்

ஆயிரக்கணக்கான புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளன. 2003 முதல் 2006

வரை தயாரிக்கப்பட்ட நிஸ்ஸானின் க்யூப், மார்ச் மற்றும் டைடா ஆகிய

மாடல் கார்களில் தொடர்ந்து எஞ்ஜின் கோளாறு குறித்த புகார்கள்

வருவதாகவும், இது தொடர்பாக அந்தக் கார்களை திரும்பப் பெற

முடிவெடுத்திருப்பதாகவும் முன்பே கூறியிருந்தது.
அதன்படி, ஓடும்போதே, எஞ்ஜின் திடீரென்று நின்றுவிடுவதாக புகார்

கூறப்பட்ட 21 லட்சம் கார்களை உடனடியாகத் திரும்பப் பெறுகிறது.


இவை அனைத்தும் ஜப்பானில் விற்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

World's most Expensive car in India ! ! !

உலகிலேயே அதிக விலை கொண்ட சொகுசு கார் இந்தியாவுக்கு வருகிறது. 

காரின் பெயர் புகட்டி வேரோன் (Bugatti Veyron). விலை ரூ: 16 கோடி!!


மணிக்கு 407 கிமீ வேகத்தில் பறக்கும் இந்த கார், 2.7 வினாடிகளில் 100 கிமீ 

வேகத்துக்கு தாவிவிடும் சக்தி கொண்டது.


அதிக விலை கொண்ட சொகுசு கார்கள் இந்தியாவுக்கு புதிதல்ல.

ஏற்கெனவே  இங்கு ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லே மற்றும் மேபேக் போன்ற,

கோடிகளில் விலை கொண்ட சொகுசு கார்கள் புழக்கத்தில் உள்ளன.


அப்படியென்ன புகட்டியின் விசேஷம்?

 "புகட்டி வெறும் கார் மட்டுமல்ல... அது கார் வடிவமைப்பின் உச்சம். இந்தக் 

காரின் பெருமையை காப்பாற்ற மிகக் குறைந்த அளவு எண்ணிக்கையில் 

தான்  விற்பனைக்கு தருகிறோம்..." என்கிறார், ஐரோப்பா, மத்திய கிழக்கு

மற்றும் இந்தியாவுக்கான இந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மேலாளர்

கய் காக்வெலின்.

இதன் மூலம், உலகின் மிகக் குறைந்த விலையான ரூ 1 லட்சம் மதிப்பு 

கொண்ட நானோ முதல், உலகின் அதிக விலையான ரூ 16 கோடி விலை 

கொண்ட புகட்டி வரை விதவிதமான கார்கள் விற்பனைக்குக் கிடைக்கும் 

சந்தை என்ற பெருமையை இப்போது இந்தியா பெறுகிறது.

தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. 

வரிசையாய்  விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே 

தீபாவளி ஆகும். 


தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து 

அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில 

இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற 

எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை 

எரித்துவிட வேண்டும்.





தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் 

மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும்

 சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க்

குளியல் (கங்கா குளியல்) செய்வர். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் 

மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை 

உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர்.


பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே 

பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர்.

அன்று அநேக பெண்கள் புடவையும்வேட்டியும் உடுப்பர். தீபாவளி 

அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் 

ஒலிக்கும். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் 

பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி 

வாழ்த்து பெறுவர்.
தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று 

சொல்வதற்கு  காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா 

இடங்களிலும்,  தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் 

அரப்பில்  சரஸ்வதியும், குங்குமத்தில்கௌரியும், சந்தனத்தில் 

பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும்"கங்கா ஸ்நானம் 

ஆச்சா" என்று  ஒருவருக்கொருவர் விசாரிப்பர். அன்றைய தினம்,

எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் 

"கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் 

இந்துப் பண்டிகையாய்  இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி 

அனைவரும் ஒற்றுமையாய்  கொண்டாடும் பண்டிகை தீபாவளி.

ஆயுத பூஜை

உயிர்ப்பொருள்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற 

இறைபொருள் உறைந்துள்ளது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் 

ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் 

பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை எனவும் சொல்லலாம்.

ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள்

வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் 

துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப் பொட்டு 

வைத்து  பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு 

எடுத்து  தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் 

சிறப்பம்சமாகும்.


ஆயுத பூஜையன்று எல்லா ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு 

மட்டுமே இந்த உபகரணங்கள், ஆயுதங்களை பயன்படுத்துவோம்,

மற்ற அழிவு  செய்கைகளுக்கு பயன்படுத்தமாட்டோம் என்று உறுதி 

எடுத்துக் கொள்வோமே.



விஜய தசமியன்று புதிதாகத் தொழில் தொடங்குவோர், கல்வி பயில 

ஆரம்பிப்போர் தங்கள் பணிகளை ஆரம்பித்தல் நன்று.


நமது பலம்

ஓரளவு வசதி படைத்த ஒருவர், தம்முடைய வீட்டை விற்று விட்டு 

அதை விட வசதியான ஒரு வீட்டை வாங்கிக் கொள்ளலாம் என்று

நினைத்தார். உடனே தரகரிடம் சென்று வீட்டை விற்றுத் தருமாறு

 கேட்டார். உடனே தரகர், "நானே பத்திரிகையில விளம்பரம் செய்து


வித்துத் தரேன் சார்" என்று கூறியதுடன், அழகிய வாசகங்களுடன்


பத்திரிகையில் விளம்பரம் செய்தார். அடுத்தநாள் தரகர் சுமார் பத்து

முறை வெவ்வேறு ஆட்களை அழைத்து வந்து வீட்டை சுற்றிக்

காட்டினார். வீட்டின் சொந்தக் காரருக்கு ஆச்சரியம். உடனே

 பத்திரிகையில் வெளியான விளம்பரத்தைப் பார்த்தார்.
`
அதில் குறிப்பிட்டிருந்த தன் வீட்டின் வசதிகளைப் பார்த்த அவர், 

"அடடா, நம்ம வீட்டுலயும், வீட்டைச் சுத்தியும் இவ்ளோ வசதிகள்


இருக்கா...இப்பத்தானே வீட்டோட அருமை தெரியுது" என்று

ஆச்சரியப்பட்டு, உடனே தரகரிடம் சென்றார். 

`
"வீட்டை விக்கற யோசனையை நான் கைவிட்டுட்டேன். இனி


எப்போதும் விக்கறதா இல்லை. மன்னிச்சுடுங்க" என்று சொல்லி

விட்டு வந்தார்.
`

இன்றைக்கு நம்மில் பலரும் இதே மனநிலையில் தான் இருந்து 

கொண்டிருக்கிறோம். நமது பலம் என்ன என்பது நமக்கே

தெரியவில்லை. பலவீனங்களையே நமது மனம் அதிகமாக படம்


பிடித்துக் காட்டுகிறது. அதன் காரணமாகவே வாழ்க்கையில்

சோர்ந்து போகிறோம். அறிவின் வெளிச்சத்தில் நடைபோடுகிறபோது,


இப்படிப்பட்ட சிக்கல்கள் ஏதும் ஏற்படுவதில்லை.
 `

நீதி : பலவீனங்களை மட்டும் பார்க்கலாம். நமது பலம் என்ன என்று


தெரிந்து கொள்ள வேண்டும். பலவீனங்களை சரி படுத்த முயற்சிக்க


வேண்டும்....


எந்திரன் டிப்ஸ்



1.பிரபல ஹாலிவுட் ஸ்டேன் விஸ்டம் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட 

முதல் இந்திய படம் எந்திரன்!

 

2.எந்திரன் படத்தில் மொத்தம் 22 காட்சிகள் அனிமேஷன்

செய்யப்பட்டுள்ளது.

 

3.எந்திரன் படத்தின் டெக்னிஷியங்களை தேர்ந்தெடுக்க ஒன்றை வருடம் 

எடுத்துக் கொண்டார் ஷங்கர்!

 

4.எந்திரன் படத்தில் 200 சிஜி ஷாட்கள் எடுக்கப்பட்டுள்ளன.

 

5.எந்திரன் படத்திற்கு மறைந்த எழுத்தாளர் சுஜாதா வசனம் எழுதியுள்ளார்.
6.பாடத்தின் பாடல் காட்சிகள் இதுவரை யாரும் படம் பிடிக்காத நாடுகளான 

பிரேசில், ஆஸ்திரியா, பெரு போன்ற நாடுகளில் படமாக்கப்பட்டது.

 

7.ஆஸ்கார் நாயகன் ரசூல் பூக்குட்டி சவுண்ட் டிரக் எடிட்டிங் செய்துள்ளார்.

 

8.எந்திரன் படம் சுமார் 873 நாட்களில் முடிக்கப்பட்டது.

 

9.படப்பிடிப்பின் இறுதிநாளில் எந்திரன் டீம்முக்கு சன் பிக்சர்ஸ் கலாநிதி 

மாறன் அவர்கள் விருந்து அளித்தார்.

 

10.படத்தின் ஆடியோ வெளியீட்டு உரிமையை திங் மியூசிக் நிறுவனம் 

வாங்கியுள்ளது.

11.புதிய மனிதா’ பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஏ.ஆர்.ரகுமான்


ஏ.ஆர்.ரகுமான்மகள் கதீஜா இணைந்து பாடியுள்ளனர்.


12.இந்தப் படத்தில் முதல்முறையாக கிளிமஞ்சாரோ என்ற பழங்குடியின 

பாட்டு இடம்பெற்றிருக்கிறது. எந்திரத்துக்கு காதல் வந்தால் எப்படி 

இருக்கும் என்பதற்கு டியூன் அமைத்து கலக்கியுள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.

 
12.மேக்-அப் போடுவதற்கு மட்டும் 6 மணிநேரம் பொறுமையாக

காத்திருந்தார் ரஜினி.

 

14.'எந்திரன்', இந்தியில் 'ரோபோ' என்ற பெயரில் ரிலீசாகிறது. 

எந்திரன் - பட விமர்சனம் ! ! !

நடிப்பு                         : ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், டேனி,

                                          சந்தானம், கருணாஸ்.

சவுண்ட் மிக்சிங் :  ரசூல் பூக்குட்டி

இசை                          :  ஏ.ஆர்.ரகுமான்

எடிட்டிங்                    :  அந்தோனி

ஒளிப்பதிவு              :  ஆர்.ரத்னவேலு

பாடல்கள்               :  வைரமுத்து, பா.விஜய்

வசனம்                      :  சுஜாதா, பாலகுமாரன்

எழுத்து - இயக்கம் :  ஷங்கர்

தயாரிப்பு                    :  சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்

முதல் நாள் ஷூட்டிங்    :  15 Feb 2008

கடைசி நாள் ஷூட்டிங் :  7 July 2010

மொத்த நாட்கள்                 :  873 நாட்கள்

பாடல் வெளியீடு               :   jul 31 2010
எந்திரன்



வருகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம். இந்த 

சாதனைகளை முறியடிக்க இனியொரு படத்தை ரஜினியைத் தவிர 

வேறு யாராலும்  தரமுடியுமா என்ற கேள்விதான் இன்று 

கோடம்பாக்கத்தில்  பிரதானமாக  எழுந்து நிற்கிறது. டிக்கெட் 

விற்பனையில்தான் இந்தப் புதிய சாதனை.  சென்னை அபிராமி 

மெகா மாலில் 20 நிமிடங்களில் 8  நாட்களுக்கான  மொத்த 

டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. நான்கு மணி நேரத்தில் ரூ 50 

லட்சத்தை எந்திரன் வசூல் செய்திருப்பதாகவும், இது 

இந்தியத் திரையுலகில் முன்னெப்போதும் நிகழாத பெரும் சாதனை. 

தமிழகத்தின் மற்ற  திரையரங்குகளில் முன்பதிவு துவங்கிய ஒரு 

மணிநேரத்தில் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டன.

சுப்பிரமணிய பாரதி

சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921).

சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் பாரதியார் 

என்றும், மகாகவி என்றும்  அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர்

எழுத்தாளர்,  பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக 

சீர்திருத்தவாதி என  பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்.



தேடிச் சோறுநிதந் தின்று  
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?


பாரதி - செல்லம்மா

எச்சரிக்கை! ! ! கதையல்ல. . . நிஜம் ! ! ! !

 
அவ‌னுக்கு வ‌ய‌து 22. மாநிற‌ம். . அதிர்ந்து பேச‌மாட்டான். 

மிக‌ அமைதியான‌வ‌ன்.



 

சொந்த‌ ஊர் என்ன‌வோ திருவ‌ண்ணாம‌லைதான். ஆனால் வ‌சிப்ப‌து

வ‌றுமைக்கோட்டுக்கு கீழே‌. அவ‌னுடைய‌ த‌ந்தை. தேர்ந்த‌ நெச‌வாளி. 

அவ‌ருக்கு உத‌வியாய் அவ‌ன‌து அம்மா. க‌ல்லூரி செல்லும் வ‌ய‌தில் ஒரு த‌ங்கை.


அவ‌னுடைய‌ த‌ந்தை என்ன‌மோ ஸ்ரீபெரும்புதூர் ஜாம்ப‌வான்க‌ளுக்கு 


அடிப‌ணியாத‌வ‌ர்தான். ஆனால் அவ‌ன் ப‌ணிந்துபோக‌ த‌யாராக‌யிருந்தான். 

வ‌றுமைக்கோடு. எப்பாடுப‌ட்டேனும் இந்த‌ கோட்டிலிருந்து வில‌கி த‌ன் குடும்ப‌த்தை 

ஒரு ந‌ல்ல‌ நிலைமைக்குக் கொண்டுவ‌ந்துவிட‌ வேண்டும் என்கிற‌ வெறி.


பெரும் முய‌ற்சிக்குப் பின்ன‌ர், துபாயில்  ஒரு ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌த்தில் அவ‌னுக்கு 


வேலை கிடைத்த‌து. மாத‌ச் ச‌ம்ப‌ள‌ம் ரூ.10000.



பிற‌ந்த‌து முத‌ல், அதிக‌ப‌ட்ச‌ம் இர‌ண்டு நாட்க‌ளுக்கு மேல் த‌ன் பெற்றோரை 


பிரிந்த‌தில்லை அவ‌ன். ப‌ணியில் சேர்ந்த‌ பின்  2  வருடத்துக்கு  ஒரு முறைதான் 

வீட்டுக்குப் போக‌ முடிந்த‌து. இந்த‌ பிரிவு அவ‌னை வ‌ருத்த‌ம‌டைய‌ச் செய்தாலும்,

த‌ன் குடும்ப‌ம் ந‌ல்ல‌ பொருளாதார‌ நிலைமைக்கு உய‌ர‌ இது அவ‌சிய‌ம் என்று க‌ருதி 

த‌ன்னைத் தானே தேற்றிக்கொண்டான்.



ப‌ண‌ம்..ப‌ண‌ம்..ப‌ண‌ம்..இது ஒன்றே முக்கிய‌ம். குடும்ப‌த்தின் வ‌றுமை ஒழிய‌ த‌ன் 


க‌வ‌ன‌ம் முழுதும் ப‌ண‌ம் ச‌ம்பாதிப்ப‌திலேயே இருக்க‌ வேண்டும் என்ப‌து

அவ‌னுடைய‌ ல‌ட்சிய‌ம், வெறி, சித்தாந்த‌ம், கொள்கை, கோட்பாடு எல்லாமே. 

காலை 6:30 ம‌ணிக்கு அவ‌னுடைய‌ ஷிஃப்ட் துவ‌ங்கும். ஆறு ம‌ணிக்கு முன்னே 

அலுவ‌ல‌க‌த்துக்குச் சென்றுவிடுவான்.



 

அன்று திங்க‌ள் கிழ‌மை. ப‌னி வில‌காத‌ காலை நேர‌ம். ஆறாவ‌து த‌ள‌த்தில் உள்ள‌து 

அலுவ‌ல‌க‌ம். த‌ரைத் த‌ள‌த்தில் லிஃப்ட்டினுள் நுழைந்து 6ஐ அழுத்தினான். 

ஆறாம் த‌ள‌ம் சென்ற‌டைந்த‌வுட‌ன் லிஃப்ட் க‌த‌வு திற‌ந்த‌போது கீழே விழுந்த‌து 

அவ‌னுடைய‌ உயிர‌ற்ற‌ உட‌ல்!

 

அங்கிருந்த‌ செக்யூரிட்டிக‌ள் அவ‌னுடைய‌ டீமுக்கு த‌க‌வ‌ல் அளித்து அவ‌னை 

ம‌ருத்துவ‌ம‌னைக்குக் கொண்டு செல்ல‌ ஏற்பாடு செய்த‌ன‌ர். ம‌ருத்துவ‌ம‌னையில்

ப‌ரிசோதித்த‌ ம‌ருத்துவ‌ர் ம‌றுநொடியே சொன்னார், "ஸாரி ஹி ஈஸ் நோ மோர்".

'டெட் ஆன் அரைவ‌ல்' என்று ரிப்போர்ட்டில் ப‌திவு செய்தார்.


பின்ன‌ர் அவ‌னுக்கு நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் விசாரித்த‌போது தெரிய‌வ‌ந்த‌து. 


அவ‌னுக்கு புகை, குடி என்று எந்த‌ ப‌ழ‌க்க‌மும் இல்லை. ஒவ்வொரு மாத‌மும் 

அவ‌னுக்கென்று ரூ.3000 எடுத்துக்கொண்டு மீதி ப‌ண‌த்தை த‌ன் குடும்ப‌த்துக்கு 

அனுப்பிவிடுவான். அந்த‌ 3500ல் போக்குவ‌ர‌த்து, அலைபேசி, உண‌வு 

ஆகிய‌வ‌ற்றிற்கான‌ செல‌வுக‌ள் அட‌ங்கும். செல‌வைக் க‌ட்டுப்ப‌டுத்த‌ அவ‌ன் 

மேற்கொண்ட‌ ஒரு முடிவு..தினமும் காலை உண‌வைத் த‌விர்த்து ஒரு நாளைக்கு

இரு வேளை ம‌ட்டுமே உண்ணுவ‌து.


 

இந்த‌ ப‌ழ‌க்க‌ம் வெகு நாட்க‌ளாய்த் தொட‌ர்ந்து உட‌லுக்குள் வாயு உருவாகி அது 

இத‌ய‌த்திற்குச் செல்லும் குழாயை பாதித்து......22 வ‌ய‌தில் மார‌டைப்பு! இது ஏதோ

க‌ற்ப‌னையாக‌ எழுத‌ப்ப‌ட்ட‌ வ‌ரி அல்ல‌. அவ‌னுடைய‌ உண‌வு ப‌ழ‌க்க‌த்தை அவ‌ன் 

ந‌ண்ப‌ர்க‌ள் கூற‌க்கேட்டு அறிந்த‌ பின் ம‌ருத்துவ‌ர் சொன்ன‌து.


ப‌ண‌ம் ஒன்றையே பிராத‌ன‌மாக‌க் க‌ருதி ப‌ர‌ப‌ர‌வென‌ ப‌ற‌ந்துகொண்டிருக்கும் 


இந்த‌ யுக‌த்தில், ந‌ம்மில் பெரும்பாலானோர் காலை உண‌வைத் 

த‌விர்த்துவிடுகிறோம்/குறைத்துவிடுகிறோம். பெரும்பாலும் நாம் சொல்லும்

கார‌ண‌ம்.."டைம் இல்ல‌". சாப்பிடுவ‌த‌ற்குக் கூட‌ நேர‌மில்லாம‌ல் 

அப்ப‌டி என்ன‌ கிழித்துவிட‌ப் போகிறோம்?


இத‌ற்கு மேல் இதைப்ப‌ற்றி நீங்க‌ளே சொல்லுங்க‌ள்!





பி.கு: நானும் இந்த‌ ம‌ட‌த்த‌ன‌மான‌ கார‌ண‌த்தைக் காட்டி ப‌ல‌ நாட்க‌ள் காலை 

உண‌வைத் த‌விர்த்திருக்கிறேன். அவ‌ன் ம‌ர‌ண‌ம்...என‌க்கொரு பாட‌ம். 

அன்றிலிருந்து என்னுடைய‌ காலை உண‌வு நேர‌ம் 9 அல்ல‌து 9:30க்குள்.