Have a Nice Day

Enjoy

இந்திய ரூபாயின் குறியீட்டை தட்டச்சு செய்வதெப்படி?

 இந்திய ரூபாய்க்கான புதிய குறியீட்டை மக்களிடம் பிரபலப்படுத்தும் 

விதமாக குறியீடு ​வடிவில் சென்னையில் வெள்ளிக்கிழமை 

அணிவகுத்த கன்னிகாபரமேஸ்வரி  கல்லூரி மாணவிகள் ​,​​ 

கொளத்தூர் எவர்வின் மெட்ரிக் பள்ளியில் 2010 மாணவ,​​ மாணவியர் 

இந்த குறியீடு  வடிவில் பங்கேற்றனர்.


தற்போது அந்த குறியீட்டை எப்படி பயன்படுத்துவது? தற்பொழது 

அதை நம் கீ-போர்ட் மூலம் பயன்படுத்த முடியாது. அதற்கு இன்னும்

சில காலம்  பிடிக்கும். அந்த குறையை போக்கும் வகையில் 

மங்களூரை சேர்ந்த  Foradian Technologies என்ற நிறுவனம் Font 

மூலமாக அதை பயன்படுத்த ஏற்பாடு செய்து உள்ளார்கள். 

அதற்கு செய்ய வேண்டியது எல்லாம் - இந்த தளத்தில் சென்று 

Font யை தரையிறக்கம் செய்துக் கொள்ளுங்கள். பின் Control Panel 

சென்று Fonts யில் அதை Install செய்யவும்.


 

இந்த குறியீட்டை

உபயோகப்படுத்த 

MS-Wordல் சென்று 

Rupee Font யை தேர்ந்து 

எடுத்து TAB மேல் 

இருக்கும் ( ` or ~) Key

அழுத்தினால் இந்த ( ` )  

குறீயிடு நமக்கு

கிடைக்கும்.

இந்த குறியீடு 

யூனிகோடு'ல் 

சேர்க்கும் வரைக்கும்

இதை பரவலாக பயன்

படுத்த முடியாது என்பது தான் தற்போதைக்கு இதில் இருக்கும் குறை.

online font-creation tools ஐ கொண்டு உங்களுக்கான font ஐ நீங்களே 

உருவாக்கலாம் என்பது கூடுதல் தகவல்.

இந்திய ரூபாயின் புதிய குறியீடு


இந்தியாவின் நாணயம் இந்திய ரூபாய் என அழைக்கபடுகிறது. 

இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரூபாயை வெளியிடுகிறது. INR என்பது 

இந்திய  ரூபாயின் ஐஎஸ்ஓ 4217 குறியீடு. இந்தியாவில் 

பெரும்பான்மையாக ருபீ, ரூபாய், ரூபயி போன்ற பெயர்களால் 

அழைக்கப்படுகிறது, ஆனால் கிழக்கு இந்தியாவின் மேற்கு 

வங்காளம், ஒரிசா, அசாம் போன்ற மாநிலங்களில் "டாக்கா"

என்னும் சமஸ்கிருதப் பெயரிலிருந்து தோன்றிய பெயரால் 

அழைக்கப்படுகிறது.

இந்திய ரூபாய்
1000 ரூபாய் தாள் இந்தியக் காசுகள்
1000 ரூபாய் தாள் இந்தியக் காசுகள்
ISO 4217 குறியீடு INR
புழங்கும் நாடு(கள்) இந்தியாவின் கொடி இந்தியா


குறியீடு Indian Rupee symbol.svg
பைசா p
முன்னர் பாவிக்கப்பட்ட குறியீடு(கள்) Indianrupeesymbols.svg
நாணயங்கள்
அதிக பயன்பாடு 1, 2, 5, 10 ரூபாய்
அரிதான பயன்பாடு 5, 10, 25, 50 பைசா
வங்கித்தாள்கள்
அதிக பயன்பாடு 10, 20, 50, 100, 500, 1000 ரூபாய்
அரிதான பயன்பாடு 1, 2, 5 ரூபாய்
வழங்குரிமை இந்திய ரிசர்வ் வங்கி
வலைத்தளம் www.rbi.org.in
நாணயசாலை இந்திய நாணயத் தயாரிப்பகம்
வலைத்தளம் www.igmint.org

புதிய குறியீட்டை வடிவமைத்திருப்பவர், தமிழ்நாட்டைச்

சேர்ந்தவரும், பிரபல ஐஐடி தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் 

மாணவருமான டி. உதயகுமார். புதிய குறியீடு, தேவநாகரி எழுத்தான 

Ra மற்றும் ரோமன் எழுத்தான R ஆகியவற்றின் கலவையாக 

உருவாக்கப்பட்டுள்ளது.  தற்போதைய நிலையில், Rs அல்லது INR 

என்றே இந்திய ரூபாய் குறிப்பிடப்படுகிறது. இது தொடர்பாக, மத்திய 

அமைச்சரவை இன்று எடுத்த முடிவை செய்தியாளர்களிடம் 

அறிவித்தார் செய்தி, ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி.


``இந்தப் புதிய குறியீடு, இந்திய ரூபாயை இந்தியாவிலும் 

வெளிநாடுகளிலும் பல்வேறு மொழிகளில் ஒரே மாதிரியாகத் 

தெரியப்படுத்துவதற்கு வழிவகுக்கும். மேலும், பாகிஸ்தான், 

நேபாளம், இலங்கை, இந்தோனேஷியா போன்ற பல நாடுகள்

ரூபாய் அல்லது ரூபயா என்ற பெயரில் தங்கள் நாணயங்களை 

அழைக்கும் நிலையில்,புதிய குறியீடு இந்திய ரூபாயின் 

தனித்துவத்தை  நிலைநாட்டுவதற்கும் உதவும்’’ என்றார் அமைச்சர் 

அம்பிகா சோனி. புதிய குறியீடு, ரூபாய் நோட்டு அல்லது

நாணயங்களில் அச்சிடப்படும்  என்று தெரிவித்த அம்பிகா சோனி, 

அடுத்த 6 மாதங்களில் இந்தியாவிலும், 18 முதல் 24 மாதங்களில் 

சர்வதேச அளவிலும் புதிய குறியீட்டை அறிமுகப்படுத்தி, 

பிரபலப்படுத்துவதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபடும் 

என்றும் கூறினார். புதிய குறியீட்டை அச்சில் வெளியிடவும், 

கணினிப் பயன்பாட்டுக்கு  உதவும் வகையில், கணினியின் 

விசைப்பலகையிலும், கணினி மென்பொருள்களிலும் இடம் 

பெறச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் 

அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார். 

இந்தப் புதிய குறியீட்டை வடிவமைத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த

டி. உதயகுமார், பல்வேறு போட்டியாளர்களைத் தாண்டி வெற்றி 

பெற்றிருக்கிறார்.ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற போட்டியில், 

கடைசியாக ஐந்து குறியீடுகளை நிபுணர் குழு தேர்வு செய்தது. அதில் 

இறுதியாக உதயகுமாரின் குறியீடு புதிய குறியீடாகத் தேர்வு பெற்றது. 

இதற்காக உதயகுமாருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் பரிசாக

வழங்கப்பட உள்ளது.


எந்திரன் பாடல்கள் இசை வெளியீட்டு விழா துபாயில் நடக்கும்



வரும் ஆகஸ்ட் மாதம் ரஜினியின் எந்திரன் பட இசை வெளியீட்டு 

விழா நடக்கும் என செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்த ஆனந்த விகடன் வார இதழ் வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரை:

‘இந்த வருடம் ரிலீஸ் நிச்சயம்!’ என்று ஷங்கர் தன் இணையதளத்தில் 

அறிவித்ததில் இருந்து… டிகிரி டிகிரியாக எகிறி வருகிறது ‘எந்திரன்’ 

ஃபீவர். ‘என்னதான் நடக்கிறது உள்ளே?’ என்று எட்டிப் பார்த்ததில் 

இருந்து…ஹீரோ, வில்லன்… இரண்டும் ரஜினியே என்பதால் டப்பிங்கின் 

போது வசன உச்சரிப்பில் வித்தியாசம் வேண்டுமே, இதனால் இரண்டு 

விதங்களில் பேசிப் பயிற்சி எடுத்து, ஒலிப்பதிவின்போது இரண்டு 

குரல்களில் பேசி அசத்தி இருக்கிறார் ரஜினி. உதவிக்குத் 

தொழில்நுட்பமும் உண்டு!

 ஃபாஸ்ட் பீட் ஒன்றைக்கொடுத்திருக்கிறார் ரஹ்மான்.

டான்ஸ் மாஸ்டர் தினேஷின் நடன 

இயக்கத்தில் செம துள்ளலும் துடிப்புமாக ஆடி இருக்கிறாராம் ரஜினி!

‘சிவாஜி’ படத்தில் ரஜினிக்கு மேக்கப் போட்ட பானுதான் ‘எந்திரன்’ 

மேக்கப் வுமனும். தவிர, ஐஸ்வர்யா ராய்க்கு மட்டுமே 57 லுக்குகளில் 

மேக்கப்பாம். யப்பா! சந்தானம், கருணாஸ் இருவரும் காமெடிக்கு 

இருக்கிறார்கள். கதைப்படி பேராசிரியர் ரஜினியின் மாணவர்கள் 

இருவரும். ரஜினி உருவாக்கும் ரோபோ ரஜினி, ஆரம்பத்தில் நல்ல 

குணங்களுடன் இருக்கும். காதல், கல்யாணப் பிக்கல் பிடுங்கல்கள் 

இருக்காது என்பதால், ரோபோ ரஜினிக்கு கல்லூரிப் பெண்கள் மத்தியில் 

செம டிமாண்ட். அலேக்காக அழகிகளை மடக்கும் ரோபோ ரஜினியைக் 

கவிழ்க்க, ‘காய்ந்துகிடக்கும்’ சந்தானம், கருணாஸ் மேற்கொள்ளும் 

முயற்சிகள்தான் காமெடிக் கதகளி. ‘நாங்க செய்ற எல்லாத்தையும் 

உன்னால செய்ய முடியாது!’ என்று ரோபோ ரஜினிக்கு இருவரும் 

சவால்விட்டு உதார்விடுவது உச்சக்கட்ட காமெடிக் குருமா!


‘எந்திரன்’ க்ளைமாக்ஸ் காட்சி பிரமாண்டத்தின் உச்சமாக இருக்குமாம். 

எண்ணூரில் அமைந்துள்ள புதிய துறைமுகத்தை நோக்கி பிரமாண்டக் 

கப்பல் ஒன்று வரும். கப்பல் முழுக்க அடுக்கப்பட்டுஇருக்கும் 

கன்டெய்னர்களில் வெடி மருந்துகள். கப்பலைச் செலுத்துவது  

வில்லனான ரோபோ ரஜினி. கப்பல், துறைமுகத்தில் மோதி வெடித்தால், 

ஒட்டுமொத்த சென்னையும் பஸ்பம் ஆகிவிடும். சென்னையை அழிக்கும் 

நோக்கத்தோடு வரும் ரோபோ ரஜினி யைத் தடுக்க, நடுக்கடலில் 

அதோடு  மோதுவார் பேராசிரியர் ரஜினி. வெடிமருந்தை 

நடுக்கடலிலேயே  பற்றவைத்து சென்னையைக் காப்பாற்றுவதுதான் 

க்ளைமாக்ஸ்!

படத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல… எக்கச்சக்க வில்லன் ரோபா 

ரஜினிக்கள் உண்டு. ரோபோ ஃபார்முலா அறிந்துகொண்டு ஏகப்பட்ட 

ரோபோ ரஜினிக்களை உருவாக்குவார் வில்லன் டேனி டெங்ஸோங்பா. 

அது தயாராகும் தொழிற்சாலைக்கே சென்று அவற்றை அடித்துத் துவம்சம் 

செய்ய வேண்டிய கடமை நல்ல ரஜினிக்கு. ஹாலிவுட் படம் ‘ஐ ரோபாட்’ 

போல முழுக்க முழுக்க அனிமேஷன் எலெக்ட்ரானிக்ஸில் எக்கச்சக்க 

ரஜினிகள் திரையில் சாகசம் செய்வார்கள்!



அழகு மட்டுமல்ல; ஐஸ்வர்யா இதில் அதிரடியும் காட்டுகிறார். கதைப்படி 

பேராசிரியர் ரஜினிக்கு கராத்தே தெரியும். ரோபோ ரஜினியிடம் இருந்து 

தப்பிக்க ஐஸ்வர்யாவுக்கு கராத்தே கற்றுத் தருவார் அவர். இதற்காக ரஜினி, 

ஐஸ்வர்யா இருவருமே 10 நாட்கள் காராத்தேவின் அடிப்படை 

வித்தைகளைக்  கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்!


‘அரசியலில் என்றைக்குமே நான் நிராயுதபாணி’, ‘வாழ்க்கை கொடுப்பவன் 

வாக்காளன்… வாய்க்கரிசி போடுறவன் வேட்பாளன்’, ‘அர்த்த சாஸ்திரம்

உங்க  வழி.. தர்ம சாஸ்திரம் என் வழி’ இவையெல்லாம் படத்தில்

ஆங்காங்கே ரஜினி  அடிக்கும் பஞ்ச் டயலாக்குகள்!
 

ஜூலை 10 அல்லது ஆகஸ்ட் 10… ‘எந்திரன்’ படத்தின் இசை வெளியீட்டு 

விழாவை நடத்தத் திட்டம். ஸ்பாட்…. அநேகமாக, துபாய்!


ரஜினியின் ஆராய்ச்சிக்கூட செட்டின் மதிப்பு ஐந்து கோடி ரூபாய்.

அலுமினிய ஷீட்டுகளால் கிழக்கு கடற் கரைச் சாலையில் பிரமாண்டமாக 

இந்த செட்டை இழைத்திருக்கிறார் கலை இயக்குநர் சாபு சிரில்!


முதல்வருக்கு பெப்ஸி நடத்திய விழாவுக்கு சென்னை வந்த 

அமிதாப், ‘எந்திரன்’ஷூட்டிங் ஸ்பாட்டில் எட்டிப்பார்த்து இருக்கிறார். 

அப்படியே அவரை ஒரு காட்சியில் நடிக்கவைத்துவிட்டார் ஷங்கர்!


‘எந்திரன்’ டப்பிங் முழுவதும் முடிந்த பின் திருப்பதி சென்று  

ஏழுமலையானுக்கு  விசேஷப் பூஜை செய்யும் திட்டத்தில் இருக்கிறார் 

ரஜினி!

எந்திரன் படத்தின் பாடல்கள் வெளியிடப்படும் மாதம்


சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் எந்திரன்


படத்தின் பாடல்கள் அடுத்த மாதம் (ஜூலை) வெளியிடப்பட உள்ளன. 

இத்தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

ஆடியோ ரிலீஸ் மலேசியாவில்   நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.
 

இதுகுறித்து சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள செய்தி:
 

“சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக 

தயாரிக்கும் படம் ‘எந்திரன்’. வித்தியாசமான கதையம்சம் கொண்ட 

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகிறது.
 

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , ஐஸ்வர்யா ராய் ஜோடியாக 

நடிக்கின்றனர். இந்தி நடிகர் டேனி டெங்சொங்பா ரஜினிக்கு 

வில்லனாகநடிக்கிறார். பிரமாண்ட இயக்குனர்  ஷங்கர் இயக்குகிறார். 

ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.

பெரு நாடு உட்பட பல்வேறு பகுதிகளில் இப்படத்தின் பாடல் 


காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் மிகுந்த 

எதிர்பார்ப்பை  ஏற்படுத்தியுள்ள ‘எந்திரன்’ படத்தின் பாடல்கள் 

ஜூலை மாதம்  வெளியாகிறது…”

நட்புக் கவிதைகள்

எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து !!! “

என சிலிர்ப்புடன்
 
பெயர் சொல்லி அழைக்கும்
 
நண்பனுடன் பேசுகையில்
 
பயமாய் இருக்கிறது
 
“எம் பேரு ஞாபகமிருக்கா”
 
என கேட்டு விடுவானோ ?

 --------------------------------------------

அப்பப்போ

போன் பண்ணுடா…

எனும் சம்பிரதாய விசாரிப்புக்கு

“கண்டிப்பா”

என நகர்வான்,

நான் கொடுக்காத நம்பரை

அவன்

எழுதிக் கொள்ளாமலேயே.
---------------------------------------------
பொய்கள் தான்

உண்மையாகவே
 
நட்பைக் காப்பாற்றுகின்றன.
 
“நேற்று கூட பேச நினைத்தேன்”
 
என
 
யாரோ பேசிக் கடக்கிறார்கள்
 
செல்போனில்.....
-----------------------------------------------------------

நட்புக்கு கூட கற்புகள் உண்டு . . .


ஒன்பதரை மணி காலேஜிக்கு

 ஒவ்வொருத்தனா கெளம்பும் போது
 
ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்
 
ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்...

 
அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ
 
அரை குறையா குளிச்சதுண்டு
 
பத்து நிமிஷ பந்தயத்துல
 
பட படன்னு சாப்டதுண்டு

பதட்டதோட சாப்பிட்டாலும்
 
பந்தயத்துல தோத்ததில்ல,
 
லேட்டா வர்ற நண்பனுக்கு
 
பார்சல் மட்டும் மறந்ததில்ல!

 
விறுவிறுன்னு நடந்து வந்து
 
காலேஜ் Gate நெருங்குறப்போ
 
'வெறுப்படிக்கிதுடா மச்சான்'னு
 
ஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா,
 
வேற எதுவும் யோசிக்காம
 
வேகவேகமா திரும்பிடுவோம்
 
வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க,
 
இல்ல 'வெற்றி' தியேட்டர்ல படம் பாக்க!

 
'கஷ்டப்பட்டு' காலேஜிக்கு போனா
 
கடங்கார professor கழுத்தறுப்பான்...
 
assignment எழுதாத பாவத்துக்கு
 
நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான்!

 
கேலி கிண்டல் பஞ்சமில்ல,
 
கூத்து கும்மாள குறையுமில்ல,
 
எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா
 
H.O.Dய கூட விட்டதில்ல!

 
ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா
 
அத அடிப்பான் காபி அந்தபக்கம்...
 
ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து
 
ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு!

 
பசியில யாரும் தவிச்சதில்ல
 
காரணம் - தவிக்க விட்டதில்ல...
 
டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும்
 
சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல!

 
அம்மா ஆசையா போட்ட செயினும்
 
மாமா முறையா போட்ட மோதிரமும்
 
fees கட்ட முடியாத நண்பனுக்காக
 
அடகு கடை படியேற அழுததில்ல ...

 
சட்டைய மாத்தி போட்டுக்குவோம்
 
சாதி சமயம் பாத்ததில்ல,
 
மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்
 
முகவரி என்னன்னு கேட்டதில்ல!

 
படிச்சாலும் படிக்கலன்னாலும்
 
பிரிச்சி வச்சி பாத்ததில்ல...
 
அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்
 
அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல!

 
வேல தேடி அலையுறப்போ
 
வேதனைய பாத்துப்புட்டோம்
 
'வெட்டி ஆபிஸர்'னு நெஜமாவே
 
மாறி மாறி சிரிச்சிகிட்டோம்!

 
ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு
 
ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ
 
மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல
 
கண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும்...
 
பக்குவமா இத கண்டும் காணாம
 
நண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ
 
'சாப்பாட்ல காரம்டா மச்சான்'னு
 
சமாளிச்சி எழுந்து போவோம்...

நாட்கள் நகர,
 
வருஷங்கள் ஓடுது,
 
எப்போதாவது மட்டுந்தான் 

இ-மெயிலும் வருகுது
 
"Hi da machan... how are you?" வுன்னு...

 
தங்கச்சி கல்யாணம்,
 
தம்பி காலேஜி,
 
அக்காவோட சீமந்தம்,
 
அம்மாவோட ஆஸ்த்துமா,
 
personal loan interest,
 
housing loan EMI,
 
share market சருக்கல்,
 
appraisal டென்ஷன்,
 
இந்த கொடுமையெல்லாம் பத்தாம
 
'இன்னிக்காவது பேச மாட்டாளா?' ன்னு
 
இஞ்சிமறப்பா போல ஒரு காதல்,
.
 
.
 
.
 
எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா,
 
நேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா!

 
இ-மெயில் இருந்தாலும்
 
இண்டர்னெட் இருந்தாலும்
 
கம்பெனியில ஓசி phone இருந்தாலும்
 
கையில calling card இருந்தாலும்
 
நேரம் மட்டும் கெடைக்கிறதில்ல
 
நண்பனோட குரல கேக்க
 
நெனச்சாலும் முடியறதில்ல
 
பழையபடி வாழ்ந்து பாக்க!

 
அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்
 
orkut இருந்தும் scrap பன்ன முடியாம போனாலும்
 
'available' ன்னு தெரிஞ்சும் chat பன்ன முடியாம போனாலும்
 
'ஏண்டா பேசல?' ன்னு கோச்சிக்க தெரியல..
 
இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல!

 
கல்யாணத்துக்கு கூப்பிட்டு
 
வரமுடியாமா போனாலும்,
 
அம்மா தவறின சேதி கேட்டதும்
 
கூட்டமா வந்தெறங்கி,
 
தோள் குடுத்து தூக்கி நிறுத்தி
 
பால் எடுத்தவரை கூட இருந்து
 
சொல்லாம போக வேண்டிய இடத்துல
 
செதுக்கிவச்சிட்டு போன என் தோழர்கள்
 
தேசம் கடந்து போனாலும்
 
பாசம் மறந்து போகாது!
 
பேசக் கூட மறந்தாலும்
 
வாசம் மாறி போகாது!
 
வருஷம் பல கழிஞ்சாலும்
 
வரவேற்பு குறையாது!
 
வசதி வாய்ப்பு வந்தாலும்
 
'மாமா' 'மச்சான்' மாறாது! 
 

மனம் தளராதே

வாழ்கையில் படிப்பது சில,

உணர்ந்து அறிவது பல,

யார் செய்த பாவம்

நீ ஏனோ பிறந்தாய்.


அதனை மீறி விதி உன் கையில்

இல்லையடி மடப்பெண்ணே

குழப்பமின்றி தெளிந்து விளையாடு

சதுரங்கம் ஆடும் நீ, மறந்தாயே . .


நான் சொல்கிறேன், நம்பு

உன்னால் முடியும்,

உணர்ந்து அறிவது பல,

வாழ்கையில் படிப்பது சில. . .


உன்னால் முடிந்தவரை

நீ போராடினாய்,

போராடுவாய்

மனம் தளராதே. . . .

காதலி தேவை ! ! !


அவசர அவசரமாக
 
எனக்கொரு
 

காதலி தேவைப்படுகிறது.

 
பாதிக்கும் குறைவாய்
 

மறைக்கப்பட்ட உடல்கள்
 

கலவரப்படுத்திப் போகிறது
 

என் ஹார்மோன்களை


சில முத்தங்களும்
 

சில சத்தங்களும்
 

தனித்திருப்பதற்கான
 

தண்டனையாய் படுகிறது



 

online'ல் பார்க்கும் ஒவ்வொரு
 

நொடியும் பேசத்துடிக்கிறது
 

மனது
 

பேசாமல் விட்ட விசயங்களும்
 

பேசுவதற்காய் சேர்த்து வைத்தவைகளும்
 

அழுத்திப்போகிறது மனதை


 

மீறி
 

பேசியவைகள் எல்லாம்
 

சச்சரவுகளில் முடிந்தது
 

பேசாதவைகள் எல்லாம்
 

கற்பனைகள் என ஒளிந்து
 

கொண்டது.


 

அவ்வப்போது எழுதியாகிவிட்டது,
 

உனக்கான காதலையும்,
 

எனக்கான வலிகளையும்,


 

போதும் வா...
 

கிளம்பி வா...
 

வந்து தணித்துப் போ எல்லாவற்றையும்
 

என் காதலியாய்...


 

பின்குறிப்பு:
 

Project இருப்பதால் May 15'க்கு அப்புறம் கிளம்பி வரவும்...

--சரவணன்.K

சந்திப்பு . . .

இரைச்சல் நிரம்பிய

சிற்றுண்டிச் சாலையில்

நீண்ட நாட்கள் கழித்து

சந்தித்துக் கொண்டோம்.



நமக்குப் பிடித்த

இளையராஜா பாடலை

ஒலித்து அழைத்தது

உன் அலைபேசி.



என்னுடன் உணவருந்தி கொண்டிருப்பதாக

பதிலளிக்கிறாய் .

நீண்ட நாட்கள் கழித்து

உன் உச்சரிப்பில்

அழகாக இருக்கிறது

என் பெயர்.



பரஸ்பர நண்பர்களையும்

பரஸ்பர விரோதிகளையும்

பற்றி சிறு குறிப்பு வரைந்து கொண்டோம்

மசால் தோசையை

உண்டு கொண்டே.



எனக்கே மறந்து போன

என் பழைய கவிதை வரிகளை சொல்லி

என்னை அதிர வைத்தாய் நீ.


உனக்கு மறந்து போன

உன் கல்லூரி கால

வீட்டின் முகவரியை

சொல்லி

கணக்கை சரி செய்து கொண்டேன் நான்



இறுதியாக

அருந்திய சக்கரை இல்லாத காபியில்

சுவைத்தது

வாழ்க்கையின் சில நிமிடங்கள்...

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் . . .

முக்கியமான மூன்று . . . .

சொர்க்கத்திற்கு .....


ஓலைகுடிசையினிலே
ஒற்றை நிலா  வெளிச்சதினிலே
 
மங்கை உனக்கு
 
மகனாக பிறந்தேனம்மா!!
 
நீ
 
மனம் மகிழும் நேரம்
 
உன்
 
மாங்கல்யம் 

பறிபோனதம்மா !!

 
மண்டியிட்டு அழுதாயம்மா
 
மனம் இறங்கவில்லை
 
இறைவனம்மா ..
 
மாராப்பு விலக்கி
 
மகன்-எனக்கு
 
பசி தீர்த்தாயம்மா
 
பஞ்சனை இன்றி
 
பஞ்சமின்றி !!

 
கிழிந்தலை உடித்தினயம்மா
 
செல்ல கிளி எனக்கு
 
கீற்று தட்டில்  சோறு இட்டயம்மா
 
முள்ளுகாட்டினிலே
 
முழங்கால் சேலை உயர்த்தி
 
காலனி இல்லாமல்
 
கால் கடுக்க உழைத்தயம்மா!!

 
உடுத்த உடிப்பின்றி - நீ
 
இருக்க புள்ளை - எனக்கு
 
புத்தாடை கட்டி மகிழ்ந்தயம்மா !!

 
பால் பருவம் ஆகிவிட்டதம்மா
 
பள்ளி பருவம் வந்துவிட்டதம்மா
 
பணக்கார பள்ளியில்
 
சேர்க்க  பஞ்சாலைக்கு
 
பயணம் செய்தாயம்மா !!
 
நான் கற்க - கந்து வட்டிக்கு
 
சீமண்ணை வாங்கினயம்மா ..

 
கல்லூரியில் சேர வேண்டும்
 
என்றுதானே உரைத்தேனம்மா ..
 
உயிர் உருக்கும்
 
உலையில்  பணி சேர்ந்தயம்மா
 
கல்லூரி வாசலை மிதிக்க
 
கந்து வட்டிகாரனிடம்
 
ஏசு பெற்றயம்மா

 
கனவுகோலோடு படிக்கின்றேனம்மா
 
நீ  கொடுத்த முத்த பரிசினை

எண்ணிக்கொண்டு ...
 
கடிதம் போட்டேனம்மா
 
அதை
 
அடுத்தவர் படிக்க கேட்டு
 
மனம் மகிழ்ந்தயம்மா !!

 
தந்தி வந்ததம்மா
 
தாவி ஓடினேனம்மா
 
தயக்கமின்றி  நம்
 
தலைஎழுத்தை
 
மாற்ற போகும்  பணத்தை தேடி

 
அம்மா
 
உன் முத்து மகன்
 
வந்திருக்கிறேன்
 
உன் செல்ல கிளி வந்திருக்கிறேன்

கலெக்டராக  வந்திருக்கிறேன்
 
கை நெறைய காசுடன் வந்திருக்கிறேன்
 
கண் திறந்து பாரம்மா அழுகின்றான்
 
அந்த உயிர் அற்ற உடல் மீது !!!!
 

காதல்

கல்லூரி

முடிந்து கடைசி

 
நாளில் கண்ணீரோட
 
பிரிய பட்டோம்..

 
அதற்கு முன்
 
ஒன்றாய்
 
சேர்ந்து புகைப்படம்
 
எடுத்துக்கொள்ள
 
பிரியப்பட்டோம்..

 
என்னிடம்
 
இருக்கும்
 
புகைப்படத்தை
 
பார்ப்பவர்கள்
 
எல்லாம்

 
உன்னை காட்டியே
 
யாரிவள்
 
என்று கேட்கின்றனர்..

 
பல
 
பேருக்கு மத்தியில்
 
இருக்கும் உன்
 
முகம் மட்டும்
 
பிரகாசமாய் ஏன்.

 
காரணம்
 
கேட்டவர்களிடம்
 
சொன்னேன்..

 
அப்பொழுது
 
அவளிடம்
 
காதல் இருந்தது..

ஒரு வரி . . .

என் வாழ்க்கை 

நிகழ்ச்சி நிரலில்

ஒரே ஒரு வரி

.
 

 . .

 . . .

 . . . .

. . . . .

அது உன் முகவரி !!!

ஹைக்கூ கவிதைகள்


ஏறும்விலைவாசி

எந்தக்கவலையுமின்றி

திருடும் எலிகள்!

—————————–———

கொடுத்த கடனுக்காய்

வாங்கிச் சென்றான்

மானத்தை!

——————————–——

சிரித்துச் செத்தான்
 

இடிப்பில்
 

வெடிகுண்டு

——————————–——

எங்கே ஒதுங்குவது
 

மழையில்
 

பார்வையற்றவன்!

——————————–——

குடங்களுடன் 
 
நிரம்பி வழிகிறது
 

வியர்வை!

——————————–——